இன்று 06.08.2017 மாலை பசுமை மக்கள் நலவாழ்வுச் சங்கத்தின் சார்பில் "வீட்டில் காய்கறி தோட்டம் அமைப்போம் - நோயின்றி வாழ்வோம்" எனும் தலைப்பில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. திரு.டி.சரவணன் (பொறுப்பாளர் - ஆரண்யா சமூகக் காடுகள், பூத்துறை (ஆரோவில்) மற்றும் திரு.ராமநாதன் ( தேசிய நல்லாசிரியர் விருதாளர் - கலைமாமணி விருதாளர் - இயற்கை ஆர்வலர் ) கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். நிகழ்வுக்கு வந்திருந்தோரை செயலாளர்.அருள்மதிபாரதி வரவேற்றார். திரு.கொ.இரா.இரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். திரு.முருகன் நன்றி கூறினார். நிகழ்வில் மாடித்தோட்டம் அமைப்பது, பராமரிப்பது, உரம் தயாரித்தல், எருவிடுதல் உள்ளிட்ட பல விஷயங்கள் விரிவாக எடுத்துக் கூறப்பட்டன.
No comments:
Post a Comment