Wednesday, 20 December 2017

பசுமை மக்கள் நலவாழ்வுச் சங்க 2ம் ஆண்டு தொடக்க விழா...

பசுமை மக்கள் நலவாழ்வுச் சங்கத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா 20.12.2017 அன்று நடைபெற்றது... நிகழ்வுக்கு தலைவர் திரு.கொ.இரா.இரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பேரா.சூரியப்ரகாஷ் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் திரு.முருகன் அனைவரையும் வரவேற்றார். செயலாளர் திருமதி.அருள்மதி பாரதி ஓராண்டு செயல்பாட்டு அறிக்கையினை வாசித்தார். பொருளாளர் திரு.சம்பந்தம் வரவு செலவு கணக்கினை வாசித்தார். திரு.கே.முருகன் சிறப்புரை நிகழ்த்தினார். உறுப்பினர்கள் சங்க செயல்பாடுகள் குறித்து கருத்துக்களை பதிவு செய்தனர். திருமதி.இந்திரா நன்றி கூறினார்.









Sunday, 17 December 2017

இரண்டாம் ஆண்டு தொடக்க விழா


பசுமை மக்கள் நலவாழ்வுச் சங்கம்
இரண்டாம் ஆண்டு தொடக்க விழா
நாள் : 20.12.2017 – புதன் கிழமை இரவு 8 மணி
இடம் : பிரைட் ஸ்கூல் அனெக்ஸ் வளாகம் – 4 வது தெரு, வாசன் நகர்,
இலாசுப்பேட்டை, புதுச்சேரி 605008
நிகழ்வு நிரல் :
·        ஓராண்டு பணிகள் – செயலர் அறிக்கை ;
·        ஓராண்டு வரவு செலவு அறிக்கை ;
·        பாதாள சாக்கடை இணைப்பு, மின் கம்பங்கள் அமைத்தல், சாலை வசதி கோரி எதிர்கால நடவடிக்கைகள் பற்றி ;
சிறப்புரை :
திரு.சி.ஹெச்.பாலமோகனன்
ஒருங்கிணைப்பாளர் – புதுச்சேரி சமூக நல்லிணக்க இயக்கம்
அனைவரையும் அன்புடன் அழைத்து மகிழும்
கொ.இரா.இரவிச்சந்திரன்                        அருள்மதிபாரதி
       தலைவர்                                         செயலாளர்                                                 
                    மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்
வாழுமிடத்தை மகிழ்வானதாக ஆக்குவோம் ..
அனைவரும் சேர்ந்தே இருப்போம் … சகிப்புத்தன்மையுடன் வாழ்வோம் …

விட்டுக் கொடுத்து வாழ்வோம் .. வாழ்வை இனிமையானதாக ஆக்குவோம்…